பாடசாலை வரலாறு
- 1926 இல் சைவ பரிபாலன சங்கம் தாபிக்கப்பட்டு தமிழ் மொழிமூல பாடசாலை ஒன்று 17.10.1934 இல் சைவ வித்யாசாலை என்ற பெயரில் தேவாலய வீதியில் ஆரம்பிக்கப்பட்டது. 1954 இல் இச்சங்கம் பாராளுமன்ற சட்டத்தினூடாக அங்கிகரிக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்தையும்
பொறுப்பேற்றுக்கொண்டது. இப்போதைய சரஸ்வதி பாடசாலை கிறகறி வீதி எனப்பட்ட மஹியங்கனை வீதியில் மேல் வகுப்புகளுக்காக வைத்திலிங்கம் ஞாபகார்த்த வாசிகசாலை என்ற தாபனத்தினூடாக வழங்கப்பட்ட காணியில் தற்காலிகமாக தொடங்கப்பட்டது.
- 1964 முதல் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றதோடு, பாடசாலை புனரமைக்கப்பட்டு கனிஷ்ட, சிரேஷ்ட பிரிவுகளாக தற்போதைய இடங்களில் இரு பாடசாலைகளாக இயங்க தொடங்கின.
- 1992 இல் மத்திய மகா வித்தியாலயமாகவும், 1993 இல் தேசிய பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இரு மொழி மூல கற்பித்தலும் தொடங்கப்பட்டது. 2013 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் புதிய தொழில்நுட்ப பாடநெறிகளான பொறியியல் தொழில்நுட்பம் உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகள் தொடங்கப்பட்டதன் மூலம் பாடசாலையானது.
- “1AB Super” ஆக தரமுயர்த்தப்பட்டது. இதற்கமைவாக தொழில்நுட்ப பீடம் அமைக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு ஊவா மாகாணத்தில் விஞ்ஞான கல்வியை மேம்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட ஆறு பாடசாலைகளில் எமது பாடசாலை முதன்மையானதாகும். 2016 ஆம் ஆண்டு தொடக்கம் சரஸ்வதி விஞ்ஞான மத்திய கல்லூரி என பெயர்மாற்றம் செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

- மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட செயற்றிட்டமான 13 வருட கட்டாய கல்வி செயற்றிட்டம் இப்பாடசாலையில் செயற்படுத்தப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் முதன்முதலாக இப்பாடசாலையிலேயே இச்செயற்றிட்டமானது செயற்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் உயர் கல்வியினை தொடர முடியாத மாணவர்கள் பலர் தொழில்சார் கல்வியினை பெற்று பயன் பெறுகின்றனர்.